Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே உள்ள ஒசக்கோட்டை சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஒட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரமாக வெற்றிலை மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது சாமிக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று கோவில் சுற்றி கொண்டுவரப்பட்டு பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.